Tuesday, May 23, 2006

Ghazini - Suttum Vizhi Sudarea

படம் : கஜினி
பாடல் : நா.முத்துக்குமார்
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======
ஆ: சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே
என் உலகம் உன்னைச் சுற்றுதே
சட்டைப் பையில் உன் படம் தொட்டுத் தொட்டு உரச
என் இதயம் பற்றிக் கொள்ளுதே
உன் விழியில் விழுந்தேன் விண்வெளியில் பறந்தேன்
கண் விழித்து சொப்பனம் கண்டேன் உன்னாலே
கண் விழித்து சொப்பனம் கண்டேன்
(சுட்டும் விழிச் சுடரே ...)

சரணம் - 1
=========
ஆ: மெல்லினம் மார்பில் கண்டேன்
வல்லினம் விழியில் கண்டேன்
இடையினம் தேடி இல்லை என்றேன்
பெ: தூக்கத்தில் உளறல் கொண்டேன்
தூறலில் விரும்பி நின்றேன்
தும்மல் வந்தால் உன் நினைவைக் கொண்டேன்
ஆ: கருப்பு வெள்ளைப் பூக்கள் உண்டா
உன் கண்ணில் நான் கண்டேன்
உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன் (உன் கண்கள்)
பெ: சுட்டும் விழிச் சுடரே..

சரணம் - 2
==========
பெ: மரங்கொத்திப் பறவை ஒன்று
மனங்கொத்திப் போனதென்று
உடல் முதல் உயிர்வரை தந்தேன்
ஆ: தீயின்றித் திரியும் இன்றி
தேகங்கள் எரியும் என்று
இன்று தானே நானும் கண்டு கொண்டேன்
பெ: மழை அழகா வெயில் அழகா
கொஞ்சும் போது மழை அழகு
கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு (கண்ணாலே)
ஆ: சுட்டும் விழிச் சுடரே......

No comments:

Post a Comment