படம்: கடலோரக் கவிதைகள்
 பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி
 இசை: இளையராஜா
 இயக்குநர்: பாரதிராஜா
 பல்லவி
 ======
 ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
       எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
       பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
       நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள் கூச்சம்
 பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
       கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
 சரணம்-1
 =========
 பெ: மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம்மாறும்
       மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடைபோடும்
 ஆ: நித்தம் நித்தம் ஒன்நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
      மாடுரெண்டு பாதைரெண்டு வண்டிஎங்கே சேரும்
 பெ: பொத்திவச்சா அன்பு இல்லை சொல்லிப்புட்டா வம்புஇல்லை
       சொல்லத்தானே தெம்புஇல்லை இந்தத்துன்பம் யாரால 
 சரணம்-2
 =========
 ஆ: பறக்கும் திசைஏது இந்தப் பறவை அறியாது
       ஒறவும் தெரியாது அது ஒனக்கும் புரியாது
 பெ: பாறையில பூமொளச்சுப் பாத்தவுக யாரு
       அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
 ஆ: காலம் வரும் வேளையில காத்திருப்பேன் பொன்மயிலே
 பெ: தேருவரும் உண்மையிலே சேதிசொல்வேன் கண்ணாலே
 பெ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே..
        கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
        பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவளமல்லித் தோட்டம்
        நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
 ஆ: கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
        எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
 
 
 
No comments:
Post a Comment