படம்                  : சென்னை 600028 
 பாடியவர்கள்  : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
 இசை                : யுவன்ஷங்கர்ராஜா 
 இயக்கம்          : வெங்கட்பிரபு 
 பல்லவி
 ======
 ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
       யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
       விடையில்லா ஓர் கேள்வி
 பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
 ஆ: காதல் வரம் நான் வாங்க
       கடைக்கண்கள் நீ வீச
       கொக்கைப் போல நாள்தோறும்
       ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
 பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
       யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
       விடையில்லா ஒரு கேள்வி
 ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 சரணம்-1
 =======
 பெ: ஊரை வெல்லும் தோகை நானே
       உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
       கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
 ஆ: ஓஹோஹோ
       நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
       நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
       உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
 பெ: காற்றில் வைத்த சூடம் போலே
       காதல் தீர்ந்து போகாது
 ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
       என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
 ஆ: யாரோ 
 பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
 ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
 பெ: விடையில்லா ஒரு கேள்வி
 ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 சரணம்-2
 =======
 ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
       உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
       என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
 பெ: ஆஹாஹாஹா
       கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
       கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
       எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
  ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
        சென்னைத் தமிழும் செந்தேன் தான்
 பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
       வங்கக்கடலும் வாய்க்கால் தான்
       அன்பே வா ஹா..
 ஆ: யாரோ 
 பெ: ம்ஹீம் ஹீம்
 ஆ: யாருக்குள் இங்கு யாரோ 
 பெ: ஆஹா ஹா
 ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
       விடையில்லா ஒரு கேள்வி 
 பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 ஆ: காதல் வரம் நான் வாங்க
       கடைக்கண்கள் நீ வீச
       கொக்கைப்போல நாள்தோறும்
       ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
 பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
       யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
       விடையில்லா ஒரு கேள்வி
 ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
 
 
No comments:
Post a Comment