Thursday, December 23, 2010

thenmerku paruvakkaattru chinaan chinnan kaattula

படம்: தென்மேற்குப் பருவக்காற்று

பாடல்: வைரமுத்து

பாடியவர்: சங்கர் மஹாதேவன்

இசை: என். ஆர். ரகுநாதன்

பல்லவி

=======

சின்னாஞ் சின்னாங் காட்டுல என்

குன்னாங் குருவி சிக்குமா

வண்ணாங் கரட்டில் பார்த்தது என்

வழியில் வந்து நிக்குமா

மூஞ்சி மூஞ்சி தெரிஞ்சது அட

முழுசா யாரு பார்த்தது

கள்ள நாட்டுச் சிறுக்கி தான் அவ

கண்ணைக் கண்டதும் வேர்த்தது

பேரைக் கேட்க நெனச்சேன் என்

புத்தி பெற‌ண்டு போச்சு

ஊரக் கேக்க நெனச்சேன் என்

உசுரு வத்திப் போச்சு

நீ பகையாளி அம்சமோ இல்லை

பங்காளி வம்சமோ

குத்தும் பாம்பாக‌ ஒளியாதே வாடி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல)

சரணம் 1

========

நீ வீதி தாண்டிப் போனாக் கூட

வேர்வையில் க‌ண்டு பிடிப்பேன்

நீ ப‌ர்தா போட்டுப் போனால் கூட‌

பார்வையில் க‌ண்டு பிடிப்பேன்

வ‌ற‌ட்டி த‌ட்டிய‌ த‌ட‌த்தைப் பார்த்தே

வ‌ய‌சைக் க‌ண்டு பிடிப்பேன்


ஒரு வ‌க்கைப் ப‌ட‌ப்பில் ஒளிஞ்சாக் கூட‌

வைர‌த்தைக் க‌ண்டு பிடிப்பேன்

அழ‌கில் க‌லைவாணி ஒரு அடையாள‌ம் தெரிய‌லையே

ம‌னசக்‌ க‌ள‌வாணி ஒரு துப்பேதும் தொல‌ங்க‌லையே

ஆண்டிப்ப‌ட்டிக் க‌ண‌வாய் அட‌ அங்க‌யும் பாத்தேன் இல்லை

தாண்டிக் குடிக்கி மேல‌ நான் தாண்டிப் பாத்தும் இல்லை

சரணம் 2

=========

காடு தின்னும் ந‌ரியோ முத‌லில்

க‌ழுத்தைத் தானே க‌வ்வும்

ஆவி தின்னும் அழ‌கு முத‌லில்

க‌ண்ணைத் தானே க‌வ்வும்

ப‌ட்டாம்பூச்சி அடிக்கும் ரெண்டு

க‌ண்ணு எப்ப‌டி ம‌ற‌க்கும்

உன்னை நொட்டாங்கையில் தொட்டாக் கூட‌

எட்டாம் நாளும் ம‌ண‌க்கும்

ர‌தியே எங்க‌ தொலைஞ்ச‌ நெஞ்சு ர‌வைக்கெல்லாம் வாடுத‌டி

கிளியே எங்க ப‌ற‌ந்த‌ என் கிடையாடும் தேடுத‌டி

தேனிச் சில்லா பூரா ஒனைத் தேடிப் பாப்பேன் வ‌ஞ்சி

உன் குடும்பி சிக்கின‌ பின்னே நான் குடிப்ப‌து தானே க‌ஞ்சி

(சின்னாஞ் சின்னாங் காட்டுல‌..)

=========================

மு இராக‌வ‌ன் என்ற‌ ச‌ர‌வ‌ண‌ன்

04 ந‌வ‌ம்ப‌ர் 2010 வியாழ‌ன் 6 48 மாலை இந்திய‌ நேர‌ப்ப‌டி

http://thiraippadap-paadal-varigal.blogspot.com

No comments:

Post a Comment