Monday, April 28, 2008

Dhaam Dhoom - Yaaro Manadhilea

படம்: தாம் தூம்
பாடியவர்கள்: கிருஷ், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

பெ: யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஏஹே
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹேஹேஹே ஏஹியேஹியே

சரணம் 1
=======

பெ: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா ஆ: முழுமையாய்
பெ: நானா ஆ: வெறுமையாய்
பெ: நாமா இனி சேர்வோமா

(யாரோ மனதிலே ஏனோ கனவிலே.. )

சரணம் 2
=======

பெ: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர் குழு: வெண்ணிலா
பெ: கண்ணீர் குழு: கண்ணிலா
பெ: நானும் வெறும் கானலா யாரோ
குழு: யாரோ பெ: மனதிலே ஏனோ
குழு: ஏனோ பெ: கனவிலே ஓ நீயா
குழு: ஓ நீயா பெ: உயிரிலே தீயா
குழு: தீயா பெ: தெரியலே
பெ: காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஆஹா
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹே ஏஹே ஏ

1 comment:

  1. வலியே என் உயிர் வழியே

    ReplyDelete