Showing posts with label Song-Y. Show all posts
Showing posts with label Song-Y. Show all posts

Monday, November 11, 2013

thalaivaa-yaar-indha-saalai-oram-pookkal-vaithadhu

படம்: தலைவா
பாடியவர்கள்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி
பாடல் : நா. முத்துக்குமார்
இசை : ஜி.வி. பிரகாஷ்

சரணம்
--------------
ஆ: யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
        காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
பெ: யார் எந்தன் வார்த்தை மீது மெளனம் வைத்தது
         இன்று பேசாமல் கண்கள் பேசுது
ஆ: நகராமல் இந்த நொடி நீள
        எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
பெ: குளிராலும் கொஞ்சம் அனலாலும்
         இந்த நெருக்கம் தான் கொல்லுதே
ஆ:  எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே
        (யார் இந்த சாலையோரம்..)

பல்லவி 1
----------------
ஆ: தீரத் தீர ஆசை யாவும் பேசலாம்
        மெல்ல தூரம் விலகிப்  போகும் வரையில் தள்ளி நிற்கலாம்
பெ: என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
         இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்
ஆ:  என்னாகிறேன் இன்று ஏதாகிறேன்
பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்
ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
         அது பறந்தோடுது வானிலே
பெ: (யார் எந்தன் வார்த்தை மீது....)

பல்லவி 2
-----------------
ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
         அது மலையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே
பெ: வைரம் போலப் பெண்ணின் மனது உலகிலே
         அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
ஆ:  கண் ஜாடையில் உன்னை அறிந்தேனடி
பெ:  என் பாதையில் இன்று உன் காலடி
ஆ:  நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்ப்பதும்
          நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
   
ஆ: யார் இந்த சாலையோரம்..
பெ: யார் எந்தன் வார்த்தை மீது...
ஆ: நகராமல்..
பெ: குளிராலும்..
ஆ: எந்தன் நாளானது இன்று வேறானது
         வண்ணம் நூறானது வானிலே


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    11 நவம்பர் 2013 திங்கள் இரவு 11 50 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Monday, April 28, 2008

Dhaam Dhoom - Yaaro Manadhilea

படம்: தாம் தூம்
பாடியவர்கள்: கிருஷ், பாம்பே ஜெயஸ்ரீ
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி
======

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே

பெ: யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ
மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமையாகின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஏஹே
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹேஹேஹே ஏஹியேஹியே

சரணம் 1
=======

பெ: மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயா ஆ: முழுமையாய்
பெ: நானா ஆ: வெறுமையாய்
பெ: நாமா இனி சேர்வோமா

(யாரோ மனதிலே ஏனோ கனவிலே.. )

சரணம் 2
=======

பெ: மிக மிகக் கூர்மையாய் என்னை ரசித்தது உன் கண்கள் தான்
மிருதுவாய்ப் பேசியே என்னுள் வசித்தது உன் வார்த்தை தான்
கண்களைக் காணவே இமைகளே மறுப்பதா
வெந்நீர் குழு: வெண்ணிலா
பெ: கண்ணீர் குழு: கண்ணிலா
பெ: நானும் வெறும் கானலா யாரோ
குழு: யாரோ பெ: மனதிலே ஏனோ
குழு: ஏனோ பெ: கனவிலே ஓ நீயா
குழு: ஓ நீயா பெ: உயிரிலே தீயா
குழு: தீயா பெ: தெரியலே
பெ: காற்று வந்து மூங்கில் என்னைப் பாடச் சொல்கின்றதோ

ஆ: வலியே என் உயிர்வலியே நீ உலவுகிறாய் என் விழிவழியே
குழு: ஆஹா
ஆ: சகியே என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ துரத்துறியே
குழு: ஏஹே ஏஹே ஏ
ஆ: மதியே என் முழுமதியே பெண் பகலிரவாய் நீ படுத்துறியே
குழு: ஆஹா
ஆ: நதியே என் இளம் நதியே உன் அலைகளினால் நீ உரசுறியே
குழு: ஏஹே ஏஹே ஏ

Sunday, March 9, 2008

Inbaa - Yaaro Yaaro endhan nenjai

படம்: இன்பா
பாடியவர்: கார்த்திக், சின்மயி
இசை: பாலாஜி பி.பி.

பல்லவி
======
ஆ: யாரோ யாரோ எந்த‌ன் நெஞ்சைத் தொட்டுப் போக‌
   மேகத்துக்குள் மூழ்கி விட்டேன் நானே
   யாரோ யாரோ எந்தன் கண்ணுரசிப் போக‌
   அந்தரத்தில் தொங்குகிறேன் நானே
   ஒரு நிமிடத்தில் என் இதயத்தில்
   அட நூறு மைல் வேகத்திலே நுழைந்தாள்
   ஒரு புன்னகை ஒரு கண்ணிமை 
   என் வானத்தையே இரண்டங்குலம் திறந்தாள்
   
   காதலிக்கிறேன் முதல் தடவை 
   காத்திருக்கிறேன் பல தடவை
   மூச்சு வழியாய் உள்புகுந்தாள் 
   இன்று வரையில் திரும்பவில்லை (காதலிக்கிறேன்..)
    (யாரோ யாரோ எந்த‌ன் ...)

சர‌ண‌ம் 1
=======
பெ: வ‌குப்பின் முடிவில் க‌ண்க‌ள் இர‌ண்டை ச‌ந்திக்கின்ற‌ சிறு நேர‌ம்
   அந்த‌ நொடிக்காய் காலை தொட‌ங்கிக் காத்திருக்கும் ம‌ன‌ம் பாவ‌ம்
ஆ: ஜ‌ன்ன‌லருகே ச‌ரியும் கூந்த‌ல் மேஜைக‌ளைத் த‌ழுவாதா
   மேஜை க‌ட‌ந்து அந்த‌ ஸ்ப‌ரிச‌ம் எந்த‌ன் விர‌ல் அறியாதா
   வ‌ந்து விடுவாள் நெஞ்சைத் தொடுவாள்
   என்ற நினைவில் நானும் ந‌ட‌ந்தேன் (யாரோ யாரோ)

பெ: காதலிக்கிறேன் முதல் தடவை 
    காத்திருக்கிறேன் பல தடவை
    மூச்சு வழியாய் உள்புகுந்தான்
    இன்று வரையில் திரும்பவில்லை

ச‌ர‌ண‌ம் 2
======
பெ: நீ என் விரலானாய் வ‌ருடும் நேர‌மே 
    நான் உன் இமையானேன் உற‌ங்கும் கால‌மே
ஆ: தேவ‌தைக‌ள் த‌ரை வ‌ந்து ந‌ட‌க்கும் நேரில் வ‌ந்து உத‌டுக‌ள் கொடுக்கும்
    உன் வ‌ருகை உண‌ர்த்திய‌து என‌க்கு ந‌டுவில் இந்தத் த‌ய‌க்கமும் எத‌ற்கு
பெ: உன் நேச‌த்தில் கைதாகிறேன் உன் பார்வையில் பெண்ணாகிறேன்
    உன் தோள்க‌ளில் குடைசாய்கிறேன் உன் வீட்டில் தான் நான் வாழ்கிறேன்

ஆ: யாரோ யாரோ என் நெஞ்சைத் தொட்டுப்போக‌..

Monday, August 20, 2007

Chennai 600028 - Yaaro Yaarukkuol (Love)

படம்                  : சென்னை 600028
பாடியவர்கள்  : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா
இசை                : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம்          : வெங்கட்பிரபு
 
பல்லவி
======
ஆ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஓர் கேள்வி
பெண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி (யாரோ யாருக்குள்)
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப் போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்குக் யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-1
=======
பெ: ஊரை வெல்லும் தோகை நானே
      உன்னால் இங்கு தோற்றுப் போனேன்
      கண்ணால் யுத்தமே நீ செய்தாய் நித்தமே
ஆ: ஓஹோஹோ
      நின்றாய் இங்கு மின்னல் கீற்றாய்
      நித்தம் வாங்கும் மூச்சுக் காற்றாய்
      உன்னை சூழ்கிறேன் நான் உன்னை சூழ்கிறேன்
பெ: காற்றில் வைத்த சூடம் போலே
      காதல் தீர்ந்து போகாது
ஆ: உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
      என்னால் வாழ ஆகாது அன்பே வா ஹே
ஆ: யாரோ
பெ: ஆஹா யாருக்குள் இங்கு யாரோ
ஆ: ம்ஹீம்.. யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெ: விடையில்லா ஒரு கேள்வி
ஆ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
 
சரணம்-2
=======
ஆ: உந்தன் ஆடை காயப்போடும்
      உங்கள் வீட்டுக் கம்பிக்கொடியாய்
      என்னை எண்ணினேன் நான் தவம் பண்ணினேன்
பெ: ஆஹாஹாஹா
      கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
      கிட்டக் கிட்ட வந்தாய் துள்ளி
      எட்டிப் போய்விடு இல்லை ஏதோ ஆகிடும்
 ஆ: காதல் கொஞ்சம் பேசும்போது
       சென்னைத் தமிழும் செந்தேன் தான்
பெ: ஆசை வெள்ளம் பாயும்போது
      வங்கக்கடலும் வாய்க்கால் தான்
      அன்பே வா ஹா..
 
ஆ: யாரோ
பெ: ம்ஹீம் ஹீம்
ஆ: யாருக்குள் இங்கு யாரோ
பெ: ஆஹா ஹா
ஆ: யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
பெ: உயிர்க்காதல் ஒரு வேள்வி
ஆ: காதல் வரம் நான் வாங்க
      கடைக்கண்கள் நீ வீச
      கொக்கைப்போல நாள்தோறும்
      ஒற்றைக்காலில் நின்றேன் கண்மணி
பெ: யாரோ யாருக்குள் இங்கு யாரோ
      யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
      விடையில்லா ஒரு கேள்வி
ஆண் குழு: உயிர்க்காதல் ஒரு வேள்வி

Monday, May 14, 2007

Chennai 600028 - Yaaro Yaarukkul (Friendship)

படம்                 : சென்னை 600028
பாடியவர்கள்  : எஸ்.பி.பி. சரண், வெங்கட்பிரபு
இசை                : யுவன்ஷங்கர்ராஜா
இயக்கம்          : வெங்கட்பிரபு
 
 
பல்லவி
=======
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யாரென்று கண்டு யார் சொல்வாரோ
கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது
உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
உப்பில்லாமல் என்னாகும்
உப்பைப் போல நட்பை எண்ணுவோம் (யாரோ யாருக்குள்)
 
 
சரணம்-1
=========
WarShip என்றும் நீரில் ஓடும்
SpaceShip என்றும் வானில் ஓடும்
FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஓஹோஹோஹோ
FriendShip என்றும் தெய்வம் என்று
Worship செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே
ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்
காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது
நண்பா வா.. ஹே   (யாரோ யாருக்குள்)
 
சரணம்-2
=========
எங்கும் திரியும் இளமைத்தீவே
என்றும் எரியும் இனிமைத்தீயே
தண்ணீர் அவிக்குமா வீசும் காற்று அணைக்குமா
என்னைக் கண்டா தன்னந்தனியா
எட்டிப் போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்
நாட்டிலுள்ள கூட்டணி போல்
நாங்கள் மாற மாட்டோமே
நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே
நண்பா வா ஹே..   (யாரோ யாருக்குள்)
 

Thursday, April 12, 2007

Anbe Sivam - Yaar Yaar Sivam


படம்          :  அன்பே சிவம்
பாடல்        : வைரமுத்து
பாடியவர்  : கமல்ஹாசன்
இசை         : வித்யாசாகர்
 
பல்லவி
========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
      நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
        அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
 
 
சரணம் -1
==========
ஆ: யார் யார் சிவம் நீ நான் சிவம்
      வாழ்வே தவம் அன்பே சிவம்
      இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
      அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)
 
 
சரணம் -2
==========
ஆ:  யார் யார் சிவம் நீ நான் சிவம்
      அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா
      மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா
குழு: அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் 
       அன்பே சிவம் அன்பே சிவம் என்போம் (அன்பே சிவம்)