Showing posts with label பாடகர் இளையராஜா. Show all posts
Showing posts with label பாடகர் இளையராஜா. Show all posts

Monday, December 30, 2013

Poomani - Tholmela Tholmela Poomaala Poomaala

படம்: பூமணி
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா


சரணம்
========
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆ:  தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால

பல்லவி 1
==========

பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா
     சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா
     நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா
     தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே
     நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே


ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
    ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
பெ:
தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


பல்லவி 2
==========
ஆ: பூவுக்கு வாசனை  யாரிங்கு தந்தது
     நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது
     என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
     உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
     ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால

 --- மு. இராகவன் என்ற சரவணன்
    30 திசம்பர் 2013 திங்கள் மாலை 5 49 மணி இந்திய நேரப்படி
     சிபிடி பேலாபூர், நவி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

Friday, November 15, 2013

valmiki-oli-tharum-sooriyanum-nee-illai

படம்: வால்மீகி
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
பாடல் : <<தெரியவில்லை>>
இசை : இளையராஜா


சரணம்
--------------
குழு: மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
            நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பெ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           (ஒளி தரும் சூரியனும்..)
          விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆ:   ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

           ஒளி தரும் சூரியனும் நீ இல்லை

பல்லவி 1
----------------
ஆ: என்னை மாற்ற ஏன் எண்ணினாய்  இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
         கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய் புல்லைப் பூவென மாற்றினாய்
பெ: மாறிப் போகின்ற உலகிலே என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
         ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும் ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
ஆ: எத்தனை உள்ளம் நோக என்னென்ன செய்தவன்
         சத்தியம் செய்தே சொல்வேன் இன்று தான் மனிதனே
பெ: திருந்திய பின்னே வருந்துவது ஏனோ
         திருந்திய பின்னே வருந்துவது ஏனோ வருவது வசந்தங்களே....


பல்லவி 2
-----------------
பெ: வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும் வந்து சொல்கின்ற நாளிது
         கோயில் மணியோசை தென்றல் காற்றோடு காதில் தேன் பாயும் நாளிது
ஆ:  கொஞ்சும் கிளி போல கோலக்குயில் போல பிஞ்சு மனசாகிப் போகுது
         கங்கை நதி போல பொங்கும் அலை போல உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
பெ: இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
          உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஆ:  ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும்
         ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும் அதிசயம் அதிசயமே


பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                  
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                    
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
        அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை                          பெ:  நான் இல்லை
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை      பெ:  நிலவும் இல்லை
ஆ:   விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானாய்      
பெ:  விளக்கானேன்
ஆ: அது போது அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்          
பெ: கிழக்கானேன்
ஆ: ஒளிதரும் சூரியனும் நீ இல்லை


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    15 நவம்பர் 2013 வெள்ளி இரவு 11 25 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Tuesday, October 30, 2007

Tamizh M A - Paravaiyea Engu Irukkiraai

படம்: தமிழ் எம்.ஏ
பாடியவர்: இளையராஜா
பாடல்: நா. முத்துக்குமார்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
 
 
பல்லவி
====== 
 
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே (பறவையே) 
 
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே 
 
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் கைகள் சொல்வதுண்டோ
 
நீ போட்டாய் கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக  

(பறவையே எங்கு இருக்கிறாய்)

 
சரணம்-1
=======
உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
 
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மெளனங்கள் போதும்
 
இந்தப் புல் பூண்டும் பறவையின் நாமம் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா
 
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே 
 
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே
 
சரணம்-2
=======
 
ஏழை காதல் மலைகள் தனில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும் 
 
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ
 
இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
 
இந்த நிகழ்காலம் இப்படியேதான்  தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா
 
முதல்முறை வாழப் பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
 
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே அன்பே