Showing posts with label பாடகி சுஜாதா. Show all posts
Showing posts with label பாடகி சுஜாதா. Show all posts

Monday, December 30, 2013

Poomani - Tholmela Tholmela Poomaala Poomaala

படம்: பூமணி
பாடல்:
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, சுஜாதா


சரணம்
========
பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
ஆ: தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
ஆ:  தோள் மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
பெ: தோள்மேல தோள் மேல பூமாலை பூமாலை
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால

பல்லவி 1
==========

பெ: செந்தாழம் பூக்களே என் கூந்தல் சூடவா
     சந்தோஷ நாட்களே என் வாசல் தேடிவா
ஆ: சொல்லாத ஆசைகள் என்னென்ன சொல்லவா
     நூறாண்டுக் காதலை ஓராண்டில் வாழவா
பெ: ஆகாய கங்கையே என் தாகம் தீர்க்கவா
     தாயாகி உன்னை நான் தாலாட்டிப் பார்க்கவா
ஆ: நீ அணைக்கும் அன்பிலே அன்பிலே
     நான் கரைந்தேன் உன்னிலே உன்னிலே
பெ: துள்ளுதே துள்ளுதே என் மனம் விண்ணிலே


ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால
    ஓ மைனா மைனா இது உண்மை தானா
     அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
     ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே
பெ:
தோள் மேல தோள் மேல பூமால பூமால
     கலந்ததிங்கு யாரால காமன் அவன் பேரால


பல்லவி 2
==========
ஆ: பூவுக்கு வாசனை  யாரிங்கு தந்தது
     நேசங்கள் என்பது நெஞ்சோடு உள்ளது
பெ: என் பெண்மை இன்று தான் பூச்சூடிக் கொண்டது
     என் கோவில் இன்று தான் தீபங்கள் கண்டது
ஆ: உன் நெஞ்சில் வாழவே ஒரு ஜென்மம் வாங்கினேன்
     உன் மூச்சில் தானடி நான் இன்னும் வாழ்கிறேன்
பெ: நான் இருந்தேன் வானிலே மேகமாய்
     ஏன் விழுந்தேன் பூமியில் வேகமாய்
ஆ: வீழ்ந்த்தும் நல்லதே தாகமாய் உள்ளதே

பெ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
ஆ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால
பெ: ஓ மைனா மைனா இது உண்மை தானா
ஆ: அந்த சொர்க்கம் எல்லாம் உன் கையில் தானா
பெ: ரெக்கை கட்டுதே நெஞ்சமே நெஞ்சமே

ஆ: தோள் மேல தோள் மேல பூமால பூமால
பெ: கலந்ததிங்கு யாரால காமனவன் பேரால

 --- மு. இராகவன் என்ற சரவணன்
    30 திசம்பர் 2013 திங்கள் மாலை 5 49 மணி இந்திய நேரப்படி
     சிபிடி பேலாபூர், நவி மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா

Friday, August 22, 2008

Villan - thappu thandaa thappu thandaa

படம்: வில்லன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன், சுஜாதா
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======


பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
ஆ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா
குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
ஆ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவி நான் செய்யவா
பெ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் ‍1
=======


பெ: களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஆ: ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி தந்து விடு
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும் வன்முறை முத்தம் கொடு
பெ: இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே
இரவோ பகலோ அது வெளியில் இருக்கட்டுமே
ஆ: நடந்து வரும் சித்திரமே நனைய விடும் சொப்பனமே
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் 2
=======


ஆ: தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும் சூரியன் புதியதடி
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும் சுகவகை புதியதடி
பெ: இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று சாயுது இளையகொடி
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று ஏங்குது பழையபடி
ஆ: ஆடை சரிந்தால் உன் அவசியம் பார்த்து வைப்பேன்
ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்
பெ: மார்பழகு இந்திரனே மஞ்சள் நிற மன்னவனே
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
பெ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
ஆ: புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

Sunday, March 23, 2008

Iyarkai - Pazhaya Kural keatkiradhae

படம்: இயற்கை
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சுஜாதா
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

(பழைய குரல் கேட்கிறதே)

சரணம் 1
=========

பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு

(பழைய குரல் கேட்கிறதே)


சரணம் 2
=========
கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

(பழைய குரல் கேட்கிறதே)

Wednesday, September 12, 2007

Roja - Pudhu Vellai Mazhai

படம்: ரோஜா
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடல்: வைரமுத்து
பாடியவர்கள்: உன்னிமேனன், சுஜாதா

பல்லவி
======

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால உன் வானம் நானே
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

சரணம் 1
=======

ஆ: பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூக்கேட்பதில்லை
பெ: பெண் இல்லாத ஊரிலே கொடி தான் பூப்பூப்பதில்லை
ஆ: உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
பெ: இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார்சொன்னது

ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
ஆ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
பெ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
ஆ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
பெ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

ச‌ரணம் 2
========

பெ: நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
ஆ: நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
பெ: இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
ஆ: மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

பெ: புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
பெ: இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
ஆ: மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
பெ: நதி நீர் நீயானால் கரை நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது

ஆ: புது வெள்ளை மழை பெ: இங்கு பொழிகின்றது
ஆ: இந்தக் கொள்ளை நிலா பெ: உடல் நனைகின்றது