Showing posts with label Movie-V. Show all posts
Showing posts with label Movie-V. Show all posts

Friday, November 15, 2013

valmiki-oli-tharum-sooriyanum-nee-illai

படம்: வால்மீகி
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
பாடல் : <<தெரியவில்லை>>
இசை : இளையராஜா


சரணம்
--------------
குழு: மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
            நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பெ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           (ஒளி தரும் சூரியனும்..)
          விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆ:   ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

           ஒளி தரும் சூரியனும் நீ இல்லை

பல்லவி 1
----------------
ஆ: என்னை மாற்ற ஏன் எண்ணினாய்  இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
         கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய் புல்லைப் பூவென மாற்றினாய்
பெ: மாறிப் போகின்ற உலகிலே என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
         ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும் ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
ஆ: எத்தனை உள்ளம் நோக என்னென்ன செய்தவன்
         சத்தியம் செய்தே சொல்வேன் இன்று தான் மனிதனே
பெ: திருந்திய பின்னே வருந்துவது ஏனோ
         திருந்திய பின்னே வருந்துவது ஏனோ வருவது வசந்தங்களே....


பல்லவி 2
-----------------
பெ: வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும் வந்து சொல்கின்ற நாளிது
         கோயில் மணியோசை தென்றல் காற்றோடு காதில் தேன் பாயும் நாளிது
ஆ:  கொஞ்சும் கிளி போல கோலக்குயில் போல பிஞ்சு மனசாகிப் போகுது
         கங்கை நதி போல பொங்கும் அலை போல உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
பெ: இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
          உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஆ:  ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும்
         ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும் அதிசயம் அதிசயமே


பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                  
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                    
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
        அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை                          பெ:  நான் இல்லை
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை      பெ:  நிலவும் இல்லை
ஆ:   விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானாய்      
பெ:  விளக்கானேன்
ஆ: அது போது அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்          
பெ: கிழக்கானேன்
ஆ: ஒளிதரும் சூரியனும் நீ இல்லை


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    15 நவம்பர் 2013 வெள்ளி இரவு 11 25 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Monday, September 29, 2008

vaaranam aayiram - mundhinam paarthaenae

படம்: வாரணம் ஆயிரம்
பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,  பிரசாந்தினி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: தாமரை

பல்லவி
========

சூர்யா: Hai Malini .. I am Krishnan..
        நான் இதை  சொல்லியே ஆகணும்.. நீ அவ்வளவு அழகு
        இங்க எவனும் இவ்ளோ அழகா ஒரு ப்ச்..
         இவ்ளோ அழகைப் பாத்திருக்க மாட்டாங்க..
        And I am in love with you...

ஆ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
        எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
        வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
        இப்போழ்தே என்னோடு வந்தாலென்ன‌
        ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன  (இப்போழ்தே)
       (முன் தினம் பார்த்தேனே..)

சரணம் 1
========

ஆ: காதலே.. சுவாசமே..

ஆ: துலாத் தட்டில் உன்னை வைத்து
        நிகர் செய்ய பொன்னை வைத்தால்
       துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெ: முகம் பார்த்துப் பேசும் உன்னை
       முதல் காதல் சிந்தும்  கண்ணை
      அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஆ: ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
       புகை போல படாமல் பட்டு நகர்வேனடி
       வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி

பெ: முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே..
        சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
        இத்தனை நாளாக
ஆ: oh my love
பெ: உன்னை நான் பாராமல்
ஆ: yes my love
பெ:  எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே

சரணம் 2
========

பெ: கடல் நீலம் மங்கும் நேரம்
         அலை வந்து தீண்டும் தூரம்
        மனம் சுத்தம் ஆகாதா ஈரத்திலே
ஆ: தலை சாய்க்கத் தோளும் தந்தாய்
       விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
       இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெ: பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
         உயிரெங்கும் உதயம் கண்டேன் நெருங்காமலே
         உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே

ஆ: முன் தினம் பார்த்தேனெ பார்த்ததும் தோற்றேனே..

Friday, August 22, 2008

Villan - thappu thandaa thappu thandaa

படம்: வில்லன்
பாடல்: வைரமுத்து
பாடியவர்: சங்கர் மஹாதேவன், சுஜாதா
இசை: வித்யாசாகர்

பல்லவி
=======


பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
ஆ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா
குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
ஆ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவி நான் செய்யவா
பெ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் ‍1
=======


பெ: களவு கொண்டோடிய கண்களைத் தூக்கத்தை
என்னிடம் திருப்பிக் கொடு
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்து விடு
ஆ: ஓ ஆயிரம் சேவைகள் கைவசம் உள்ளது அனுமதி தந்து விடு
ஆடையும் அகிம்சையும் ஓரத்தில் தூங்கட்டும் வன்முறை முத்தம் கொடு
பெ: இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே
இரவோ பகலோ அது வெளியில் இருக்கட்டுமே
ஆ: நடந்து வரும் சித்திரமே நனைய விடும் சொப்பனமே
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே
யாரிதழில் சுவை அதிகம் பார்ப்போம்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா

சரணம் 2
=======


ஆ: தினம் தினம் ஓரிடம் உதிக்கிற போதும் சூரியன் புதியதடி
தினம் தினம் ஓரிடம் சேர்கிற போதிலும் சுகவகை புதியதடி
பெ: இருபது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று சாயுது இளையகொடி
இருபது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று ஏங்குது பழையபடி
ஆ: ஆடை சரிந்தால் உன் அவசியம் பார்த்து வைப்பேன்
ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்
பெ: மார்பழகு இந்திரனே மஞ்சள் நிற மன்னவனே
உன் பெயரைச் சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே
ஓரிரவில் ஏழ்பிறவி வாழ்வேன்

குழு: உய் உய் உய் உய் உய் உய் உய் உய்
உய் உய் உய் உய் உய் உய் உய் உய்

பெ: தப்புத் தண்டா தப்புத் தண்டா தலைவா நீ செய்யவா
ஆ: வெயில் படா இடங்களை விளையாடித் தொடவா
பெ: மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
ஆ: புண்படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

Monday, October 22, 2007

Vel - Ottraikkannalae

படம்        :  வேல்
பாடியவர்: ஹரிசரண்
இசை       : யுவன்ஷங்கர்ராஜா
 
பல்லவி
======
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்லை என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே
தெரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே)  
 
 
சரணம்-1
=======
ஹோ சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே) 
 
 
சரணம்-2
========
ஹோ கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
 
 
நன்றி: இந்தப் பாடலின் சுட்டியை எனக்கனுப்பிய தோழி பொன்னரசிக்கு!
 

Wednesday, September 5, 2007

Veeraappu - Puliya Kili Jeyichaa Kaadhal

படம்: வீராப்பு
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, மதுஸ்ரீ
இசை: டி.இமான்
பாடல்: நா.முத்துக்குமார்

பல்லவி
======

பெ: ஹாஹ ஹாஹ ஹா ஆ ஆ....
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
   புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
பெ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
    புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
   எழுந்திட மனசு இருக்குமா
   எழுந்தாலும் மனசு இருக்குமா
பெ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
ஆ:  நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

சரணம்-1
=======

பெ: காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
    தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை
ஆ: உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும் இரு கண்களில்
   காட்டிக் கொடுக்கிறதே
   உனக்கும் எனக்கும் முன்னாலே நம் நிழல்கள்
   ஒன்றாய் நடக்கிறதே
பெ: ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
   காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
   புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

சரணம்-2
=======

பெ: ஆ ஹாஅ ஆ ஹா...
    நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
    மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும் ஆ ஆ ஆ
ஆ: ஓ உன்னைக் காணும் முன்னாலே அடி என்னை
    நானே வெறுத்து வந்தேன்
    உன்னைக் கண்ட பின்னாலே நான் புல்லையும்
    பூண்டையும் நேசிக்கிறேன்
பெ: ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
   உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


ஆ: புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல்
பெ:ஆ புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
ஆ: இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால்
   எழுந்திட மனசு இருக்குமா
பெ: எழுந்தாலும் மனசு இருக்குமா
ஆ: நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
பெ: நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
   ஆ ஆ.. ஆ ஆ ஆ ஆ...
   நான் உன்னைப் பார்க்கிறேன்