Showing posts with label Song-O. Show all posts
Showing posts with label Song-O. Show all posts

Friday, November 15, 2013

valmiki-oli-tharum-sooriyanum-nee-illai

படம்: வால்மீகி
பாடியவர்கள்: இளையராஜா, பேலா ஷிண்டே
பாடல் : <<தெரியவில்லை>>
இசை : இளையராஜா


சரணம்
--------------
குழு: மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்
            நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பெ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           (ஒளி தரும் சூரியனும்..)
          விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆ:   ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
           இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
           விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
          அது போதும் அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்

           ஒளி தரும் சூரியனும் நீ இல்லை

பல்லவி 1
----------------
ஆ: என்னை மாற்ற ஏன் எண்ணினாய்  இங்கு என்னை ஏமாற்றி வாழ்ந்தவன்
         கல்லைக் கூட நீ கனிய வைக்கிறாய் புல்லைப் பூவென மாற்றினாய்
பெ: மாறிப் போகின்ற உலகிலே என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
         ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும் ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்
ஆ: எத்தனை உள்ளம் நோக என்னென்ன செய்தவன்
         சத்தியம் செய்தே சொல்வேன் இன்று தான் மனிதனே
பெ: திருந்திய பின்னே வருந்துவது ஏனோ
         திருந்திய பின்னே வருந்துவது ஏனோ வருவது வசந்தங்களே....


பல்லவி 2
-----------------
பெ: வண்ணப் பூப்பூத்து வாசம் எங்கெங்கும் வந்து சொல்கின்ற நாளிது
         கோயில் மணியோசை தென்றல் காற்றோடு காதில் தேன் பாயும் நாளிது
ஆ:  கொஞ்சும் கிளி போல கோலக்குயில் போல பிஞ்சு மனசாகிப் போகுது
         கங்கை நதி போல பொங்கும் அலை போல உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது
பெ: இன்று போல் என்றும் என்றும் நல்லதே செய்யலாம்
          உள்ளதே போதும் என்று நிம்மதி கொள்ளலாம்
ஆ:  ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும்
         ஒரு வழி அடைத்தால் மறுவழி திறக்கும் அதிசயம் அதிசயமே


பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                  
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: ஒளி தரும் சூரியனும் நான் இல்லை                    
ஆ:  ஒளி தரும் சூரியனும் நீ இல்லை
பெ: இரவனில் வான் வரும் நிலவும் இல்லை        
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை
பெ: விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானேன்
        அது போதும் அது போதும் உன் விடியலுக்கோர் கிழக்கானேன்
ஆ: ஒளி தரும் சூரியனும் நீ இல்லை                          பெ:  நான் இல்லை
ஆ:  இரவினில் வான் வரும் நிலவும் இல்லை      பெ:  நிலவும் இல்லை
ஆ:   விலகாத இருளினையும் விலக்கி வைக்கும் விளக்கானாய்      
பெ:  விளக்கானேன்
ஆ: அது போது அது போதும் என் விடியலுக்கோர் கிழக்கானாய்          
பெ: கிழக்கானேன்
ஆ: ஒளிதரும் சூரியனும் நீ இல்லை


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    15 நவம்பர் 2013 வெள்ளி இரவு 11 25 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Wednesday, November 13, 2013

yamuna-ohoho-ottrai-panithuli

படம்: யமுனா
பாடியவர்கள்: பிரசன்னா, சைந்தவி
பாடல் : வைரமுத்து
இசை : இலக்கியன்


சரணம்
--------------
ஆ:  ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது
         ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
         ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்த்து
பெ:  ஆஹாஹா அன்பின் கரம்தொட அலைமோதி நெஞ்சம் உடைந்தது
          பார்த்த முதல் பார்வை வந்து என் தேகம் எங்கிலும் நனைந்து போகுதே
ஆ:   காற்றில் உன் சுவாசம் வந்து என் காயம் எங்கிலும் மருந்து போடுதே
           புதிய  உலகம் புதிய காற்று
பெ:   காதல் இசையில் கவிதை மீட்டு

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா

பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி உருண்டோடி உயிரில் விழுந்தது  


பல்லவி 1
----------------
ஆ:  கூந்தலை அள்ளி அள்ளிக்  குதிரை வால் போட்டுப் போட்டு
          நடந்து நீ வருகையில்  என் மனம் குதிரையாகுதே
பெ:  நெஞ்சிலே ரகசியமுண்டு கண்ணிலே ரகசியமில்லை
          காதலும் கர்ப்பமும் மறைப்பது சாத்தியமில்லை
ஆ:   தானமாய் வருவதை யாரும் திட்டம் போட்டுத் திருடுவதில்லை
           உன்னுயிர் மொத்தம் என்னதடி.
பெ :  சொந்தமாய் உள்ளதை எல்லாம் துறக்கும் போதே சொர்க்கம் கிட்டும்
           கவிதையில் ஞானிகள் சொன்னபடி
ஆ:    உயிர் தொடவா தொடவா
பெ :  இது கன்வா நனவா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
பெ:   ஓஹோஹோ ஒற்றைப் பனித்துளி
            உருண்டோடி உயிரில் விழுந்தது
       

பல்லவி 2
-----------------
ஆ:  காற்றிலே ஆடை சரிந்தால் கவசமாய்ப் புத்தகம் கொண்டாய்
          என்னையே கவசமாய் எப்போது அணியப் போகிறாய்
பெ:  என் மார்பில் உன்னை அணிந்தால் எப்போதும் இறங்கவும் மாட்டாய்
           இதயமே வருடுவாய் இரவோடு திருடப் பார்ப்பாய்
ஆ:  அள்ளியே தருவதினாலே கொள்ளை அழகு குறைவதுமில்லை
          மெளனமே மொழியின் உச்ச நிலை
பெ:  கூந்தலில் ஈரம் சொட்டக் குளித்து வந்த பின்னால் கூட‌
          குறும்புகள் இன்னும் ஓய்வதில்லை
ஆ:   இதில் பெறுதல் சுகமா
பெ:  இல்லை தருதல் சுகமா

ஆ:    தானன தானனனா தானனனன தானானா
            தானன தானனனா தானனனன தானனா
           (தானனா தானனனா...)


 -- மு. இராகவன் என்ற சரவணன்
    13 நவம்பர் 2013 புதன் மாலை 5 10 மணி (இந்திய நேரப்படி)
     நவி மும்பை | மகாராஷ்டிரா | இந்தியா

Monday, October 22, 2007

Vel - Ottraikkannalae

படம்        :  வேல்
பாடியவர்: ஹரிசரண்
இசை       : யுவன்ஷங்கர்ராஜா
 
பல்லவி
======
ஒற்றைக்கண்ணால உன்னைப் பார்த்தேனடி ஒறங்கவில்லை என் மனசு
ஓரக்கண்ணால என்னைப் பார்த்தாயடி ஒறங்கவில்லை என் மனசு
புரியலையே புரியலையே நீ யாருன்னு புரியலயே
தெரியலையே தெரியலையே இது காதல் தான்னு தெரியலயே
தெரியாத பொண்ணப் பாத்தா புதுசாத் தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹே ஹே ஹே (ஒற்றைக் கண்ணாலே)  
 
 
சரணம்-1
=======
ஹோ சாலையோரப் பூக்கள் எல்லாம் உன்னைப் பார்த்து விழுகிறதே
மாலை நேரப் பட்டாம்பூச்சி உன்னைப் பார்க்கத் துடிக்கிறதே
நித்தம் நித்தம் உன்னை நினைத்து ரத்தம் எல்லாம் கொதிக்கிறதே
உன்னை உன்னை நெருங்கும் போது அத்தனை நரம்பும் வெடிக்கிறதே
பெண்ணே உன் கால்தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கைநகங்கள் விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணைப் பாத்தால் தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே) 
 
 
சரணம்-2
========
ஹோ கோடைக்காலச் சாரல் ஒன்று என்னை விரட்டி நனைக்கிறதே
காலை நேரம் காலைத் தொட்ட பனித்துளி கூட சுடுகிறதே
மலரே மலரே உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை உடைக்கிறதே
அழகே அழகே உந்தன் பார்வை என்னைக் கட்டி இழுக்கிறதே
பெண்ணே உன் வாய்மொழிகள் நான் கண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள் நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணைப் பார்த்தால் அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே (ஒற்றைக் கண்ணாலே)
 
 
நன்றி: இந்தப் பாடலின் சுட்டியை எனக்கனுப்பிய தோழி பொன்னரசிக்கு!
 

Monday, August 7, 2006

Naalai - OruMaattram UruMaattram

படம் : நாளை
பாடியவர் : கார்த்திக்
இசை : கார்த்திக்ராஜா

பல்லவி
======
ஒருமாற்றம் உருமாற்றம்
இரு இதயத்தில் நடக்கிற தடுமாற்றம்
நடைமாற்றம் உடைமாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
நடந்து போகும் பாதையில் இரண்டுபக்கம் பூமரம்
மழையும் வெயிலும் கலந்தபின் வானவில்லாய் மாறிடும்
உலகமே புதிதாய்த் தோன்றும்

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 1
========
நேற்றுவரை...
நேற்றுவரை வானத்தை நிமிர்ந்துபார்க்க நேரமில்லை
கண்கள்மூடிப் பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை
முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே
மூச்சுக்காற்று மொத்தத்திலே அர்த்தம் இன்று புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 2
========
பூமியிலே...
பூமியிலே யாருமிங்கு தனியாகப் பிறப்பதில்லை
வழித்துணைகள் வருகையிலே பயணங்கள் மறப்பதில்லை
கட்டாந்தரையில் இன்று ஒரு காலடிச்சுவடு தெரிகிறதே
வெட்டவெளியில் திரிந்தபின்னே வீட்டின் அருமை புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)